வியாழன், அக்டோபர் 20, 2011

.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاء بِمَا فَضَّلَ اللّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُواْ مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّهُ وَاللاَّتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلاَ تَبْغُواْ عَلَيْهِنَّ سَبِيلاً إِنَّ اللّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا

4:34. சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள்.



இரத்தத்தை உறையச் செய்யும் வெறிச் செயல்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஒருப் பெண் தனித்து ஸன்ஆ'விலிருந்து கபத்துல்லாஹ் சென்று தவாப் செய்து விட்டுத் திரும்பும் அச்சமற்ற நிலையை ஏற்படுத்திக் காட்டுவேன் என்று பெருமானார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அவ்வாறு அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்திலேயே அந்த நிலையை உருவாக்கியும் காட்டினார்கள். 

அந்த பொற்காலம் அவர்களின் மறைவிற்குப் பின்னரும் அவர்கள் ஆட்சி செய்த மக்கா, மதீனாவைக் கடந்தும் பாதுகாப்பு வழங்கும் மார்க்கமாகிய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் வாழ்ந்தப் பகுதிகள் அனைத்திலும் அதே அச்சமற்ற நிலை நீடித்தது.

அச்சமற்ற பாதுகாப்பான வாழ்க்கையை மனித குலத்திற்கு வகுத்து வழங்கியது இஸ்லாம் அப்படிப்பட்ட பாதுகாப்பான மார்க்கத்தில் பிறந்த சிலப் புள்ளுருவிகளின் ஈனச் செயலால் இனிய இஸ்லாம் மார்க்கம் தவறான விமர்சனத்திற்குள்ளாக்கப்படுவதை அறிந்திருக்கிறோம்.
சமீபத்தில் கீழக்கரையைச் சேர்ந்த திமுக நகரசபை தலைவன் ஜலீல் என்ற ஈனப்பறிவியிடம் தனது குடும்பத்தின் வறுமை காரணமாக பத்தாயிரம் ரூபாய் கடனுதவிக் கேட்டுச் சென்ற யாஸ்மின் பானுவுக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து தான் மட்டுமல்லாமல் தன்னுடன் ஐந்து மனித மிருகங்களை சேர்த்துக் கொண்டு சீரழித்து அப்பெண்ணின் உடல் முழுவதும் சிகரெட் நெருப்பால் சூடிட்டு அக மகிழ்ந்து அதை வீடியோப் படம் எடுத்து அப்பெண்ணின் மயக்கம் தெளிந்தப் பின்னர் அதை அப்பெண்ணிடமே போட்டுக் கான்பித்து வெளியில் சொன்னால் இதை வெளியிட்டு உன் மானத்தை வாங்கிடுவோம் என்றும் கூறி மிரட்டி இருக்கின்றனர்.

இதில் கொடுமை என்னவென்றால் ஜலீல் என்ற ஈனப்பிறவி தன் சகோதரி யாஸ்மீனுடன் பலாத்காரத்தில் ஈடுபடுவதற்கு தன்னுடன் துணைக்கு அழைத்த மிருகங்களில் நான்கு பேர் முஸ்லீமல்லாதவர்கள் என்பது நெஞ்சைப் பிழியும் செய்தியாகும்.

இவ்வாறு சீரழிக்கப்படும் நிகழ்வை படமெடுத்து வைத்துக் கொண்டு அதை காட்டிப் பல நாட்கள் தொடர்ந்து கள்ள சுகம் அனுபவிக்கும் காமுகர்களை போலல்லாமல் இச்சம்பவத்திற்கு பின் மீண்டும் தன்னிடம் நெருங்க விடாமல் உடனடியாக காவல்துறையை அணுகி அந்த காட்டுமிருகங்களுக்கு கைவிலங்கு மாட்டி கம்பி எண்ணச் செய்த யாஸ்மினின் துணிச்சல் இதுப் போன்று சிக்கிக் கொண்டு தொடர்ந்து மானமிழக்கும் அப்பாவிப் பெண்களுக்கு வரவேண்டும்.

இது மாதிரியான அநீதிகள் அப்பாவி பெண்களுக்கு இழைக்கப்படுவதற்கு பெரும்பாலும் குடும்பத்தை நிர்வகிக்கும் ஆண்கள் டம்மியாகி விடுவதும் ஒருக் காரணமாகும். அந்த சேடிஸ்டிடம் கடன் வாங்குவதற்கு யாஸ்மினின் கணவர் சென்றிருந்தால் யாஸ்மினின் மானம் காக்கப்பட்டிருக்கும்.  

ஏழை குடும்பமாக இருந்தாலும், பணக்காரக் குடும்பமாக இருந்தாலும் எந்த குடும்பத்தில் ஆண்கள் டம்மியாகி விடுகின்றார்களோ அந்த குடும்பத்துப் பெண்கள் எதாவது ஒரு வழியில் சீரழிவை அடைந்து கொள்ளும் அவல நிலை ஏற்படுகிறது.

ஏழைக் குடும்பத்தில் ஆண்கள் டம்மியாகி விட்டால் வறுமையைத் துடைக்க பெண்கள் ஆண்களிடம் கடன் பெற முணைகின்றனர் பலர் மறுக்காமல் கொடுக்கவும் செய்வார்கள் அதைக் குறிப்பிட்ட தவனையில் திரும்ப செலுத்த முடியவில்லை என்றால் இதுப்போன்ற அவல நிலைகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது.

அல்லது வட்டிக்கு வாங்கி விட்டால் வட்டியை மாதா மாதம் எளிதாக கட்டி விடலாம் என்ற அசட்டு தைரியத்தில் வாங்குகின்றனர் ஒன்றிரெண்டு மாதங்கள் மட்டுமே வட்டியை செலுத்த முடிகிறது அதற்கடுத்து அது முடியாமல் போகும் பொழுது இதுப்போன்ற அவல நிலைகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது.

பணக்காரக் குடும்பத்தில் ஆண்கள் டம்மியாகி விட்டால் செல்வச் செருக்கு பெண்களை வேர மாதிரி  நிலைக்கு இழுத்துச் செல்கின்றது.

பெண்களின் பலஹீனம் அறிந்தே அல்லாஹ் பெண்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்களிடம் ஒப்படைத்து பெண்களை தங்கள் கணவன் மார்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும்படி கட்டளையிடுகிறான், அல்லாஹ்வின் உத்தரவுக்கு செவிசாய்த்து தங்கள் கணவன் மார்களுக்கு கட்டுப்படும் பெண்களை சிறந்தப் பெண்கள் என்றும் இறைவன் நற்சான்றிதழ் வழங்குகிறான்.

4:34. சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள்.

நடந்து முடிந்து விட்ட இந்த காட்டுமிராண்டித் தனமான செயலுக்காக தற்போது அவர்கள் கற்பழிப்பு ஆபாசபடம் எடுத்து மிரட்டுதல் கொலை மிரட்டல் பெண் வன்கொடுமை உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டிருந்தாலும் ஜலீல் திமுக நகரசபை தலைவனாக இருப்பதாலும், அவனின் தந்தை திமுக நகரச் செயலாளராக இருப்பதாலும் அரசியல் செல்வாக்கைப் பயன் படுத்தி வெளியில் வருவதற்கு முயற்சிக்கலாம்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்